தமிழ்நாடு

“பட்டன் செல்போன்களை பயன்படுத்தும் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 3 கூட்டாளிகள்”: பணமோசடி வழக்கில் புதிய தகவல்!

தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆண்ட்ராய்டு அல்லாத சாதாரண பட்டன் செல்போன்களை பயன்படுத்தி வருவதால் பதுங்கி உள்ள இடத்தை கண்டறிவதில் சிக்கல் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

“பட்டன் செல்போன்களை பயன்படுத்தும் ராஜேந்திரபாலாஜி  உள்ளிட்ட 3 கூட்டாளிகள்”: பணமோசடி வழக்கில் புதிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை கடந்த 17ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.பி.மனோகர் தலைமையில் 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படைகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போலிஸார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக விக்ரமின் சாமி படத்தில் வரும் வில்லனை போன்று வெவ்வேறு கார்களில் மாறி மாறி தப்பித்து வருகிறார் ராஜேந்திர பாலாஜி. இன்னும் ஒரு படி மேல் சென்று வெவ்வேறு கெட் அப்-ல் ராஜேந்திர பாலாஜி வலம் வருவதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் போலிஸாரும் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருக்கும் 600 பேரின் செல்போன் எண்களை ட்ராக் செய்து அவரை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

“பட்டன் செல்போன்களை பயன்படுத்தும் ராஜேந்திரபாலாஜி  உள்ளிட்ட 3 கூட்டாளிகள்”: பணமோசடி வழக்கில் புதிய தகவல்!

மேலும் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறை வழங்கியுள்ளது. முன்னதாக ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு விவகாரத்தில், தங்கள் தரப்பை கேட்காமல் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும்4 புகார்கள் குவிந்துள்ளது. அந்த மனுகளை பெற்றுள்ள காவல்துறை, புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகார் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆண்ட்ராய்டு அல்லாத சாதாரண பட்டன் செல்போன்களை பயன்படுத்தி வருவதால் பதுங்கி உள்ள இடத்தை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் இருந்து வெளிவரும் தகவலில், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் ஒரே இடத்தில் பதுங்கி இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும் அவருடன் உள்ள அனைவரும் ஆண்ட்ராய்டு அல்லாத சாதாரண பட்டன் செல்போன்களை பயன்படுத்தி வருவதால் பதுங்கி உள்ள இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். தற்பொழுது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருக்கியுள்ள நிலையில் இன்று அல்லது நாளை அவர் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories