தமிழ்நாடு

”எத்தனை காலமானாலும் இனி மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி திமுக தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியுள்ளார்.

”எத்தனை காலமானாலும் இனி மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இனி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் ஒரே முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இனி எந்த இயக்கமும் வரமுடியாது. அந்த அளவிற்கு ஆட்சி செய்து கொண்டு வருகிறார் என தேனியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் இனி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் ஒரே முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான், இனி எந்த இயக்கமும் வரமுடியாது. அந்த அளவிற்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

”எத்தனை காலமானாலும் இனி மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

இந்தியாவில் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறினாலும் அதை மிகவும் அடக்கத்தோடு இந்திய நாட்டில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று நமது முதல்வர் கூறியுள்ளார். அவருக்கு உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். மூத்த பொறுப்பாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடம் கிடைக்காவிட்டாலும் வருத்தப்பட வேண்டாம். வருகின்ற கூட்டுறவுத்துறையில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்.

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி திமுக தான். இன்று தொண்டர்கள் சுறுசுறுப்பில் தேனி‌ மாவட்டத்தை மிஞ்சுவதற்கு எந்த மாவட்டமும் இல்லை. 100 சதவீத வெற்றயினை நமது தலைவரிடம் ஒப்படைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் பணியாற்றிய காலம் தான் அந்த காலம் என்றும் அனைவரும்‌ ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றி பெறுவோம் என கூறினார்.

banner

Related Stories

Related Stories