தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு!

18 ம் தேதி சென்னைக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்.

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு; சென்னைக்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 18ம் தேதி சென்னைக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறாமால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகத்தை நெருங்கும் என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories