தமிழ்நாடு

“குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி” : போலிஸார் வழக்கு பதிவு!

“குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி” : போலிஸார் வழக்கு பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.,யாக கோபாலகிருஷ்ணன் இருந்தார். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் வெறும் உடம்புடன் நுழைந்துள்ளார்.

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்.பி-யை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர். உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அ.தி.மு.க எம்.பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி இன்று குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க முன்னாள் எம்.பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் முழு நிர்வாணமாக இருந்த சம்பவம் நீலகிரி அ.தி.மு.க.,வில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories