தமிழ்நாடு

“கேன்சர் நோயால் அவதிப்பட்ட மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை” : எடப்பாடி அருகே நடந்த சோகம்!

சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த மகனை தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றதாக வெளியான சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“கேன்சர் நோயால் அவதிப்பட்ட மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்த தந்தை” : எடப்பாடி அருகே நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சி குடைக்காரன்வளவு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வண்ணத்தமிழ் (14). கடந்த ஓராண்டுக்கு முன்பு சைக்கிள் ஓட்டும் போது கீழே விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தினால் கடந்த ஓராண்டாக எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கேன்சர் நோய் வந்து பெரும் அவதிக்குள்ளாகிய வண்ணத்தமிழ் வீட்டில் உறங்காமல் கூச்சலிட்டுக் கொண்டே வந்துள்ளார். இதனைக் கண்டு தாங்க முடியாத அவரது தந்தை பெரியசாமி தனது உறவினர் பிரபு என்பவரை வழவழைத்து விஷ ஊசி போட்டு கொன்றதாக கூறப்படுகிறது.

இத்தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சிறுவனுக்கு விசஊசி தான் போடப்பட்டதா ? அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து கொங்கணாபுரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையே மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories