தமிழ்நாடு

தாத்தா, பாட்டியை வீட்டோடு எரித்து கொலை செய்த பேரன்: சேலத்தில் கொடூர சம்பவம்!

சேலத்தில் தாத்தா, பாட்டி கண்டித்ததில் தீவைத்து பேரன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாத்தா, பாட்டியை வீட்டோடு எரித்து கொலை செய்த பேரன்: சேலத்தில் கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மனைவி காசியம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகன் குமாரின் மகன் ரிஷிவந்தை, உறவினருடன் ஒப்பிட்டுப் பேசி கண்டித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் ரிஷிவந்த் நேற்று நள்ளிரவில் தாத்தா, பாட்டி தூக்கிக் கொண்டிருந்தபோது குடிசை வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தீயில் கருகிய வயதான தம்பதியினரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிறுவன் ரிஷிவந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாத்தா, பாட்டியைத் தீவைத்து எரித்து பேரன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories