மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அருண்குமார். இவருக்கும் ஜெயபிரதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் ஆண் குழந்த உள்ளது. இந்நிலையில் அருண்குமார் மனைவியிடம் கூடுதலாகப் பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வரவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அருண்குமார் மீண்டும் மனைவியிடம் வரதட்சணை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார் வீட்டின் சமையல் அறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்து பாலை எடுத்து மனைவி மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் ஜெயபிரதாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர். இது சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை வாடிப்பட்டி போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.