தமிழ்நாடு

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !

முத்தமிழறிஞர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு தினம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க பொருளாளரும், அமைச்சருமான துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்து முன்னதாக அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories