தமிழ்நாடு

“பா.ஜ.க-வினரிடம் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்துவாங்கிய கனிமொழி எம்.பி!

வெளியே ஒன்றும், உள்ளே ஒன்றும் என ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுப்பதால் பா.ஜ.க-வினரிடம்நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.க-வினரிடம் எப்போதுமே  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” : மோடி அரசை வெளுத்துவாங்கிய கனிமொழி எம்.பி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் பதிமூன்று மாற்றுத்திறனாளிகள் பயனடையும் விதத்தில் புதிய வீடுகளை தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் 30 பேருக்கு விலையில்லா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருசக்கர வாகன மானிய தொகை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்.பி, “பா.ஜ.கவினர் எப்போதுமே ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள் தான். அதனால் தான் அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகிறோம்.

நாடாளுமன்ற பெகாசஸ் என்பது மிகப்பெரிய பிரச்சினை வெளியே எந்த பிரச்சினையையும் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய பா.ஜ.க அரசு, நாடாளுமன்றத்துக்குள் அதனை விவாதிக்க தயாராக இல்லை.

இது நாட்டுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. இப்படிப்பட்ட நிலைப்பாடு தான். வெளியே ஒன்றும், உள்ளே ஒன்றும் என ஒவ்வொரு இடத்துக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நிலைப்பாடு எடுப்பதால் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதே பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார். ஆனால், இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதுதான் அவர்களின் உண்மையான முகம்.

நாடாளுமன்ற உறுப்பினர் மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் உள்ளோம். ஏனென்றால் கொரோனா தொற்று குறித்து பேச வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

அந்த மசோதாவை குறித்து விவாதிக்க கூறியுள்ளோம். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் வேண்டும் என கேட்கிறோம். ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு. பத்திரிகையாளர்களின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டுகேட்கப்பட்டு உள்ளது. யாரை வேண்டுமானாலும் அரசு நினைத்தால், அவர்களது மடிக்கணினி, கணினி அல்லது செல்போன் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து வைத்து, அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை இது.

யாருக்குமே பாதுகாப்பு இல்லை. சாதாரண கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் இதே நிலை தான். சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியலில் இருக்கக்கூடியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும்போது, அதனை பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது. தயாராக இல்லை என்று ஏன் சொல்கிறது.

இதனை விவாதிக்க கோரி அனைத்து கட்சி தலைவர்களும் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம். ஆனால், அதனை எடுத்து அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கான வாய்ப்பும் இல்லை. அதனால் தவறு என்பது அரசாங்கத்தின் மேல் தான் உள்ளது. அவர்கள் அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். அதை செய்யக்கூட அவர்கள் தயாராக இல்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories