தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாததால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,63,363 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டுமே 394 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,40,245 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 569 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,44,568 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 6,222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 4 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,573 ஆக அதிகரித்துள்ளது.