தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்திலே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக சுட்டிக்காட்டும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்தனர். இது தொடர்பாக பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, உரிமைக்குழு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியது இதையும் எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்களும், வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, முன்பு விசாரணைக்கு வந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது.

வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர். 2017ல் அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தி.மு.க எம்.எல்.ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க எம்.எல்.ஏக்கள் தரப்பில் அமீத் ஆனந்த் திவாரி ஆஜராகி ஏற்கனவே ஒரு பக்க சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228ஐ மீறும் வகையில் மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ளா துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் குழுவில் இருக்கிறார். என்றும் வாதிட்டனர்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சட்டப்பேரவை உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

banner

Related Stories

Related Stories