மதுரையில் எய்ம்ஸ் அமைக்க இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்துவைக்கவில்லை. அதேப்போல், மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!
சட்டப்பேரவை கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் பேச ஆளுநர் அனுமதி மறுத்துள்ளதைத் தொடர்ந்து , ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (02.02.2021) தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கியது.