தமிழ்நாடு

நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி

வேளாங்கண்ணியில் கடை விரிவாக்க பணியை பாஜக பிரமுகர் தொடர்ந்து தடுத்து வந்ததால் உணவாக விடுதி உரிமையாளர் தற்கொலை முயற்சி.

நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாமராமபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. வேளாங்கண்ணியில் தாராபவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.

தமிழ்மணி உணவக விடுதியை விரிவாக்கம் செய்வதற்கான கட்டட பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அருகில் உணவகம் நடத்தி வரும் பாஜக பிரமுகர் பாஸ்கர் அதிமுகவினர் உதவியுடன் கட்டுமான பணிகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்.

தமிழ்மணியின் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளரை உணவு அருந்தவிடாமலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி
நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி

இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிமுகவினருக்கும் பாஜகவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்மணி நேற்று பூச்சிமருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி ஈடுபட்டுள்ளார்.

இதனை கண்ட கடை ஊழியர்கள் அவரை வேளாங்கண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்

ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வரும் தமிழ்மணியை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் பாஜக பிரமுகரின் தொடர் தொந்தரவால் உணவக விடுதி உரிமையாளர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

banner

Related Stories

Related Stories