தமிழ்நாடு

“தி.மு.க ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்” : துரைமுருகன் உறுதி!

“தி.மு.க ஆட்சி வந்தவுடன் முதியோர் உதவித் வழங்குவதுடன் மேலும் நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள்கள் உயர்த்தி வழங்கப்படும்” என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

“தி.மு.க ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்” : துரைமுருகன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரசமங்கலம் வண்டறந்தாங்கல் மெட்டுகுளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, “அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்” என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பின்னர் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய துரைமுருகன், “இன்னும் நாலு மாத காலத்தில் தி.மு.க ஆட்சி வருவது உறுதி. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நின்றுபோன அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவது புதிய பயனாளிகளுக்கும் கேட்டவுடன் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாட்கள் வழங்கப்படும். ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் சுனில் குமார் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories