தமிழ்நாடு

“மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரமிது” : தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு!

மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

“மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டும்  நேரமிது” : தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

“மோடி அரசுக்கு கூஜா தூக்கும் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டும்  நேரமிது” : தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு!

இந்த உண்ணவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) சி.பி.ஐ, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், இந்த உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பங்கேற்றுள்ள கட்சி நிர்வாகிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “அனைத்து சாலைகளும் டெல்லியை நோக்கி உள்ளது. உலகத்தின் அத்தனை கண்களும் உற்று நோக்கும் போராட்டம் டெல்லி விவசாயிகள் போராட்டம்.

உலகம் அறியும் இந்த போராட்டத்தை, மத்திய அரசும், அதற்கு கூஜா தூக்கும் மாநில எடப்பாடி அரசும் இதனை கண்டுகொள்ளாமல் தூங்குகிறது. யாருக்கான போராட்டமாக இருந்தாலும் தி.மு.க முதன்மையாக நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

விவசாயிகளுக்கு அவலையும், மக்களுக்கு உமியையும் கொடுக்கும் இந்த அரசு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கத்தான் செய்கின்றது. மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சியை முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories