தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா தொற்று - 20 பேர் பலி: கொரோனா நிலவரம் ! #COVID19

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,344 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா தொற்று - 20 பேர் பலி: கொரோனா நிலவரம் ! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,43,822ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், தமிழகத்தில் கொரோனாவால் இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் பலி எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 75,384பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1 கோடியே 1,05,61,722 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,04,862 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா குணமடைந்து இன்று மட்டும் 2,386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7,13,584 ஆக உள்ளது. தற்போது 18,894பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories