தமிழ்நாடு

“நவ.,6 வரையில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” - சென்னை வானிலை தகவல்!

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 10 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

“நவ.,6 வரையில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” - சென்னை வானிலை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 48 (05.11.2020) மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் , ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

“நவ.,6 வரையில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்” - சென்னை வானிலை தகவல்!

அடுத்த 72 (06.11.2020) மணி நேரத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

மேட்டுப்பாளையம் (கோவை) 7, திருச்சுழி (விருதுநகர்), திருப்பூர், குன்னூர் (நீலகிரி) தலா 5, ராஜபாளையம் (விருதுநகர்) 4, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கெட்டி (நீலகிரி ), ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது

மீனவர்களுக்கான எச்சரிக்கை என எதுவும் இல்லை என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories