தமிழ்நாடு

சென்னை, கோவையை அடுத்து திருப்பூரில் உயரும் கொரோனா... தமிழகத்தின் இன்றைய பாதிப்பு நிலவரம்! #CoronaUpdates

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 3,940 பேர் மீண்டிருக்கிறார்கள்.

சென்னை, கோவையை அடுத்து திருப்பூரில் உயரும் கொரோனா... தமிழகத்தின் இன்றைய பாதிப்பு நிலவரம்! #CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 68 ஆயிரத்து 984 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 2,481 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து 7.29 லட்சத்து 507 பேர் இதுவரையில் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இன்றைய பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 671 பேருக்கும், கோவையில் 243, திருப்பூரில் 149, செங்கல்பட்டில் 136, சேலத்தில் 125, திருவள்ளூரில் 115 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 31 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாக 11 ஆயிரத்து 183 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

இதனையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 19 ஆயிரத்து 504 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories