தமிழ்நாடு

“அரியர் தேர்வுகளையும் ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

அரியர் தேர்வு ரத்து குறித்து குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாத பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

“அரியர் தேர்வுகளையும் ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில், இறுதி பருவத் தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“அரியர் தேர்வுகளையும் ஏன் ஆன்லைனில் நடத்தக்கூடாது?” - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

இதையடுத்து, அரியர் தேர்வுகள் ரத்து விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிலைப்பாடு என்ன எனவும், அரியர் தேர்வு குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பல்கலைக்கழக மானியக் குழு தரப்பு வழக்கறிஞர், அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக தெளிவான கூடுதல் பதில் மனு தாக்கல் செய்வதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். இறுதியில், அரியர் தேர்வுகள் ரத்து செய்வதில் தங்களுக்கு உடன்பாடுபில்லை எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதிப் பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு உத்தரவிட்டார். அதேபோல தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories