தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 28ம் தேதி தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தகவல்!

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 28ம் தேதி தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம்,ஆந்திர கடற்கரைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வட கிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக் கூடிய நிலையில் வடகிழக்கு பருவமழையானது தமிழகம் புதுவை தெற்கு ஆந்திரா ராயலசீமா தெற்கு கர்நாடகா பகுதிகளில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ஓட்டி தொடங்கக் கூடும். இந்தாண்டிற்கான வட கிழக்கு பருவ வட தமிழகத்தில் இயல்பையொட்டியும் தென் தமிழகத்தில் இயல்பக விட குறைவாக பதிவாகும் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories