தமிழ்நாடு

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த 48 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த 48 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கங் கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. ஆகவே, புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாகவும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியில் நிலவும் (1.5 கிலோ மீட்டர் உயரம் வரை ) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. அடுத்த 48 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அக்டோபர் 10 முதல் 14 வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 10 முதல் 14 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 11,12 மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 10 மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 11.10.2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

banner

Related Stories

Related Stories