தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்! 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு (7.6 கிலோ மீட்டர் உயரம்) சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எஞ்சிய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி (28.09.2020) நேரத்தில் சேலம்,கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்; கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை மையம் தகவல்! 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்டம்பர் 29 மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 29 & செப்டம்பர் 30 மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்க கடல் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories