தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் உட்பட 18 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்சுக்கு இடைக்கால தடை : ஐகோர்ட் !

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மு.க.ஸ்டாலின் உட்பட 18 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்சுக்கு இடைக்கால தடை : ஐகோர்ட்  !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக அரசால் 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டி, அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.-க்கள் சட்டப்பேரவைக்குள் 2017ஆம் ஆண்டு குட்கா பொட்டலங்களை கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக பேரவை தலைவர் அனுப்பிய பரிந்துரையின் அடிப்படையில், சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பபட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி அமர்வு விசாரித்து இந்த ஆகஸ்ட் 25ல் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில் 2017ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு இராண்டாவது முறையாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரணைக்கு வந்தது

மு.க.ஸ்டாலின் உட்பட 18 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்சுக்கு இடைக்கால தடை : ஐகோர்ட்  !

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது.. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர்.

2017ல் அனுப்பிய நோட்டீசில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி அதை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தி.மு.க எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில் தான் குட்கா கிடைப்பது குறித்த பிரச்சினையை பேரவையில் எழுப்பப்பட்டது. உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் உட்பட 18 தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ்சுக்கு இடைக்கால தடை : ஐகோர்ட்  !

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தும், இந்த தடை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீடிக்கும் எனும் உத்தரவு பிறப்பித்த நீதிபதி இந்த வழக்கு சபாநாயகர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு அக்டோபர் 28ஆம் தேதியன்று ஒத்தி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories