தமிழ்நாடு

"தலைகவசம் போடாம ஏன் ஆட்டோ ஓட்டுனீங்க" - அபராதம் விதித்த குமரி போக்குவரத்து காவல் துறை!

"தலைகவசம் போடாம ஏன் ஆட்டோ ஓட்டுனீங்க" - அபராதம் விதித்த குமரி போக்குவரத்து காவல் துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் செல்வாகரன். இவரது மொபைலுக்கு அதிர்ச்சி மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 1600 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார்.

ஆன்லைனில் தனக்கு வந்த அபராதம் பற்றி தேடிப்பார்த்ததில், செல்வாகரன் குலசேகரம் அருகே தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றதாக பதிவாகியிருந்தது. செல்வாகரனின் ஆட்டோவின் பதிவு எண்ணில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் இரு சக்கர வாகனம் இல்லை என்றும், கொரோனா காலத்தில், சவாரி இல்லாமல் இருக்கும் தான் வாகனத்தை பெரிதும் இயக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், குலசேகரம் தான் இருக்கும் இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் என்றும், அங்கு தான் செல்லவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஊரடங்கில் வருமானம் இல்லாமல் தவிக்கும் தனக்கு 1600 அபராதம் விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் செல்வாகரன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories