தமிழ்நாடு

கோவை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதால் செப்டம்பர் 23 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

அவலாஞ்சி (நீலகிரி ) 21, பந்தலூர் (நீலகிரி ) 14, மேல் பவானி (நிலக்ரிர் ) 13,வால்பாறை (கோவை ) 12, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தேவலா (நீலகிரி ) தலா 11, சின்கோனா (கோவை ) 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 22 வரை மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்றும், செப்டம்பர் 21 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலிலும் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 20, 21ல் தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22 வரை தென்மேற்கு , மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

கோவை உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!

மேலும், செப்டம்பர் 23 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 21.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

banner

Related Stories

Related Stories