தமிழ்நாடு

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!

பொறியியல் படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

மேலும் அரியர் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது. இதனால் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடைபெறும்.

கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்கவேண்டும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் (Multiple Choice Questions) தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories