தமிழ்நாடு

தீவிரமடையும் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுவை, காரைக்கால் உட்பட பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். நாளையும், நாளை மறுநாளும் (செப்.,2, 3) மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

தீவிரமடையும் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்களுக்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 1 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 2 குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல, செப்.,1, 2 தேதிகளில் கேரள கடலோர மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 5 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 02.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர்அலை 2.5 முதல் 3.0 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

banner

Related Stories

Related Stories