தமிழ்நாடு

திருமணமாகி 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - திருச்சி அருகே நடந்த பயங்கரம்!

திருச்சி அருகே திருமணமான 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - திருச்சி அருகே நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊரட்சியில் உள்ளது வாழவந்திபுரம். இந்த பகுதியில் வசிப்பவர் ஜான்ரவி,குழந்தை தெரசா தம்பதின் மகன் அருள்ராஜ். 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயாபைப் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அருள்ராஜீக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைத் சேர்ந்த திரவியராஜ் பிரகாசி தம்பதியின் மகள் எம்.காம் பட்டதாரியான கிருஷ்டி ஹெலன்ராணி (26) ஆகியோருக்கு கடந்த மாதம் 10ம் தேதியன்ற இரு வீட்டர் சம்மதத்துடன் திருமனம் நடைப்பெற்றது.

புதுமணத் தம்பதி இருவரும் வாளவந்தபுரம் பகுதியில் உள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதையினை கழிக்க வீட்டிலிருந்து அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக சென்றபெண் வீடு திரும்பவில்லை.

திருமணமாகி 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - திருச்சி அருகே நடந்த பயங்கரம்!

இதனால் கணவர் அருள்ராஜ் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித அடையுமின்றி சடலமாக கிடந்துள்ளார்.

அவர் அணிந்துயிருந்த நகைகள் மாயமாகி உள்ளது. இதுகுறித்துகொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த சமயபுரம் கொள்ளிடம் போலிஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லால்குடி டி.எஸ்.பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணைசெய்து வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில், கிறிஸ்டியன் ஹெலன் ராஜ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், அவர் அணிந்திருந்த நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. திருமணமான 40 நாட்களே ஆன இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories