தமிழ்நாடு

“ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது சரியான முடிவே” - சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது சரியான முடிவே” - சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2018 மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

2018 மே 28ல் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது.

அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது.

“ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது சரியான முடிவே” - சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

2019 பிப்ரவரி 27ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என வாதங்களை எடுத்து வைத்தது. வேளாண் நிறுவனம் சார்பாக திறக்க வேண்டும் என்று வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது.

“ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது சரியான முடிவே” - சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

அதேபோல ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மனுதாரர்கள் இந்த ஆலையை திறக்கக்கூடாது என பாதிப்புகள் குறித்து வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது எனவும் அந்த ஆலைக்கு பூட்டி சீல் வைத்தது சரி என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories