தமிழ்நாடு

“நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!

கோவை வனப்பகுதியில் யானைகளின் தொடர் உயிரிழப்புக்கு நச்சுத்தன்மை கொண்ட உணவே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக பெண் யானை ஒன்று மயக்க நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த 12 வயதுடைய பெண் யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்து வந் தநிலையில், அந்த யானை நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இதனையடுத்து முதற்கட்டமாக யானை உடல் உபாதைகளாலே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யானையின் உடலை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே, யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

“நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!

கோவை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு காரணங்களால் கடந்த 8 மாதங்களில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை சுமார் 17 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து யானைகள் உயிரிழப்பு குறித்து உரிய ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த யானைகளில் ஒரு யானை மட்டுமே துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மற்ற அனைத்து யானைகளும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் கிடைத்த தகவலில், நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட செரிமானக் கோளாறுகள், அதனால் ஏற்பட்ட தொற்றால் உடல் பாதை மற்றும் யானையின் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

“நச்சுத்தன்மை கொண்ட உணவால் கோவை வனப் பகுதியில் யானைகள் தொடர்ந்து பலி” : அதிர்ச்சி தகவல்!

அதுமட்டுமல்லாது வனப் பகுதியில் அந்நிய தாவரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட தாவரத்தால் யானை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் யானைகள் உயிரிழப்பு குறித்து அரசும், வனத்துறை அமைச்சரும் கவலைப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories