தமிழ்நாடு

“பெற்றோர்கள் வாட்ஸ் ஆப் குழு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்”: கோவை பி.எஸ்.பி.பி அடாவடி!

பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழு உருவாக்கியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பெற்றோர்கள் வாட்ஸ் ஆப் குழு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்”: கோவை பி.எஸ்.பி.பி அடாவடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் பி.எஸ்.பி.பி (பத்ம சாஸ்திரி பால பவன்) என்கிற சிபிஎஸ்இ பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளி தமிழகம் தவிர பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமையாளர் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆவார்.

கோவை வடவள்ளி பகுதியில் இயங்கும் இந்த பிஎஸ்பிபி பள்ளியில் மிகவும் வசதிபடைத்தவர்களின் பிள்ளைகளே அதிகம் பயின்று வருகின்றனர். சுமார் ஐநூறுக்கும்மேற்பட்ட மாணவர்கள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள நிலையில் இப்பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த அருணா என்பவரின் ஆண், பெண் இரட்டை குழந்தைகள் இந்த பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர். ஊரடங்கால் பள்ளியில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் அதற்காக பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியுள்ளனர்.

“பெற்றோர்கள் வாட்ஸ் ஆப் குழு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்”: கோவை பி.எஸ்.பி.பி அடாவடி!

அந்த வாட்ஸ் ஆப் குழுவில் ஆன்லைன் வகுப்புகளுக்கான லாகின் ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவையும் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், 1ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்ட சில மணி நேரங்களில், இவர்களின் இரட்டை குழந்தைகள் வகுப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், வாட்ஸ் அப் குழுவிலிருந்து பெற்றோர் அருணாவும் நீக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணத்திற்காக தன்னை குழுவில் இருந்து நீக்கினர் என்பது தெரியாமல் அதிர்ச்சியடைந்த அருணா பள்ளியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் கடந்த ஐந்து நாட்களாக எவ்வித விளக்கமும் பள்ளி தரப்பில் தெரியப்படுத்தவில்லை. இச்சூழலில் தற்போது எவ்வித விளக்கமுமின்றி அவர்களின் இரட்டை குழந்தைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கூறுகையில், “இப்பள்ளியில் திடீரென தாங்கள் மட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இதேபோன்று எந்தவித காரணமுமின்றி குழுவிலிருந்து நீக்கப்பட்டு, குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதிக்காமல், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

“பெற்றோர்கள் வாட்ஸ் ஆப் குழு தொடங்கியதால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்”: கோவை பி.எஸ்.பி.பி அடாவடி!

நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் உள்ள எங்களோடு நெருக்கமாக உள்ள ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, பெற்றோர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதும், அதில் கல்வி கட்டணம் எவ்வளவு என பேசியதுதான் பிரச்சனை என்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நியாயம் கிடைக்க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யஉள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.

banner

Related Stories

Related Stories