தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்றின் வேகம் 40-50கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் இடியுடன்  மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோயமுத்தூர் நீலகிரி தேனி திண்டுக்கல் மதுரை திருநெல்வேலி தென்காசி விருதுநகர் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் இடியுடன்  மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்றின் வேகம் 40-50கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

அதேபோல வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறை காற்று வேகம் 40-50கி.மீ வேகத்தில் இருக்கும் என்பதால் அடுத்த 48மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் இடியுடன்  மழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 6செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் தரமணியில் 5செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையில் இன்று காலை மொத்தமாக 202.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மயிலாப்பூர் பகுதியில் 48.6 மி. மீ, புரசைவாக்கம் - 38.6 மி.மீ, தொண்டியார் பேட்டை - 37.8 மி.மீ, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் - 35.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories