தமிழ்நாடு

சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி தகவல்!

சென்னையில் பத்திரிகையாளர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சென்னையில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேனி விடுதியில் தங்கிருந்து தனியார் நாளிதழின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

தற்போது அவர் தங்கிருந்த விடுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சீல் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. செய்தியாளருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி தகவல்!

அதேபோல், தனியார் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சென்னை ராயபுரத்தை சேர்ந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் தந்தை சென்னை கடற்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பத்திரிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories