தமிழ்நாடு

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - BJP, VHP அமைப்பினர் கைது : சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

கோவையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - BJP, VHP அமைப்பினர் கைது : சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோவை மாவட்டம் கணபதி வேதம்பாள் நகரில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசல் மீது கடந்த 4-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னனி அமைப்பினர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை வைத்து இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் போலிஸார் விசாரித்தனர்.

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - BJP, VHP அமைப்பினர் கைது : சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

அந்த விசாரணையின் அடிப்படையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அகில் மற்றும் பா.ஜ.க உறுப்பினரான பாண்டி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் போரில் போலிஸார் கைது செய்தனர். பள்ளிவாசல் மீது இவர்கள் இருவரும் பெட்ரோல் குண்டு வீசியது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories