தமிழ்நாடு

''வச்சு செய்ய போகுது'' : நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

''வச்சு செய்ய போகுது'' : நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை விடிய விடிய மழை பெய்யும்.

நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories