தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: ரூ.80ஐ எட்டும் அபாயம்; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. விரைவில் 80 ரூபாயை எட்டும் என்பதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: ரூ.80ஐ எட்டும் அபாயம்; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, கடந்த 2 வாரங்களாக எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூ.76.83 காசுகளாகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 2 வாரங்களில் மட்டும் தினந்தோறும் பைசா கணக்கில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை 2 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநிலைத் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதனால் சாமானிய மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள்.

banner

Related Stories

Related Stories