தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை ஆணையத்தின் நிலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது மாநில அரசு. இதனால் 13 பேர் பலியாகினர் என ஆவேசமாக வாதாடிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து வேதாந்தாவின் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories