தமிழ்நாடு

"இஸ்லாமிய மக்களின் சாதனைகளிலும் சோதனைகளிலும் தி.மு.க துணை நிற்கும்" - மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து

மிகுந்த நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இருக்கும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இஸ்லாமிய மக்களின் சாதனைகளிலும் சோதனைகளிலும் தி.மு.க துணை நிற்கும்" - மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளான பக்ரீத் நல்வாழ்த்துகளை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தியாகம், அறம் , மனித நேயம், ஏழை எளியவர்கள் மீது பரிவு-கருணை உள்ளிட்ட உயர்ந்த நற்செயல்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இஸ்லாமியப் பெருமக்கள் 12.8.2019 அன்று பக்ரீத் என்ற தியாகத் திருநாளை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஈத்-உல்-அஸா என்ற நோன்பு இருந்து "கடமையைச் செய்வதிலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது" என்பதை உணர்த்தும் நன்னாளாக இந்த நாள் அமைந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

"இஸ்லாமிய மக்களின் சாதனைகளிலும் சோதனைகளிலும் தி.மு.க துணை நிற்கும்" - மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து

அனைத்து நாடுகளிலும் வாழும் இஸ்லாமியர்கள், புனித மக்கா நகருக்குச் செல்வது தங்கள் கடமை என்ற உணர்வில் இருக்கும் வேளையில், சில கெடுபிடிகளை விதித்து- அந்தப் புனிதப் பயணம் செல்வோருக்கு பல வித நெருக்கடிகளை உருவாக்குகின்ற இக்கட்டான சூழல் நிலவுவதை நாம் காண்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதும் இஸ்லாமியப் பெருமக்களுக்குத் துணை நின்று அவர்களின் சாதனைகளிலும், சோதனைகளிலும் பங்கெடுத்து வருகிறது.

அந்த அடிப்படையில் இன்றைக்கு அரசியல் சட்ட ரீதியாக இஸ்லாமியப் பெருமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் நெருக்கடிக்குள்ளாகும் சூழ்நிலையிலும், அம்மக்களின் கருத்து அறியாமல் எதேச்சதிகாரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற இந்த நேரத்திலும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் போல் உற்ற துணையாக நிற்கும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"இஸ்லாமிய மக்களின் சாதனைகளிலும் சோதனைகளிலும் தி.மு.க துணை நிற்கும்" - மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து

ஏழைகள் மீது காட்டும் கருணை தனி மனித வாழ்வில் ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதுவே சமுதாய அளவில் மிகுந்த நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது. இந்தத் தியாகத் திருநாளில் சமுதாய நல்லிணக்கம் போற்றும் பணியின் சிறப்பம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories