தமிழ்நாடு

தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் !

தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

டிக் டாக் கோப்புப்படம்
டிக் டாக் கோப்புப்படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும். அதேசமயத்தில் தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக்-டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

சாகச வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories