தமிழ்நாடு

தண்ணீரில்லா தமிழகம்.. கவலையில்லா அரசைக் கண்டித்து தி.மு.க. மாபெரும் போராட்டம்!

தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணாத அதிமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தண்ணீரில்லா தமிழகம்.. கவலையில்லா அரசைக் கண்டித்து தி.மு.க. மாபெரும் போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னையால், மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனை கண்டுகொள்ளாமல் தங்களது ஆட்சியை எப்பாடுபட்டாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு டெல்லிக்கு அவ்வப்போது சென்று வருகின்றனர் அ.தி.மு.கவினர்.

தண்ணீரில்லா தமிழகம்.. கவலையில்லா அரசைக் கண்டித்து தி.மு.க. மாபெரும் போராட்டம்!

ஆகையால், மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தட்டுப்பாட்டில் இருப்பதற்கு, எந்த தீர்வு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கண்டன போராட்டத்தில் லட்சக்கணக்கான தி.மு.கவினருடன் பொதுமக்களும் இணைந்து ஆளும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories