தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு மாட்டிக் கொள்ளும் விவசாயிகள்? நூதன போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன முறையில் தூக்கு மாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு மாட்டிக் கொள்ளும் விவசாயிகள்? நூதன போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு மாட்டிக் கொள்ளும் விவசாயிகள்? நூதன போராட்டம்!

இதற்கு முன்னதாக ஜூன் 1 தேதி போராடிய 13 இடங்களில் போராட்டம் நடத்திய 450 விவசாயிகள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பன் கிணறு அமையவுள்ள கர்ணாவூரில் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட 3 விவசாயிகள் நூதன முறையில் தூக்கு மாட்டிக் கொள்ளும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories