தமிழ்நாடு

“தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்கப் பயணிப்போம்” - கவிஞர் வைரமுத்து ட்வீட் !

தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்கப் பயணிப்போம் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ் மொழியை ஆட்சிமொழி ஆக்கப் பயணிப்போம்” - கவிஞர் வைரமுத்து ட்வீட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி ஏற்றதும் பெரும்பாலான எம்.பி.க்கள் ‘தமிழ் வாழ்க’ என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் பெரியார், அம்பேத்கர், கலைஞர் புகழ் வாழ்க என்றும் கூறினார்கள். இந்நிலையில், ட்விட்டரில் “தமிழ் வாழ்க” என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories