தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 490 பேர் மீது வழக்கு: போலீசார் அராஜகம்!

திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி 495 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 490 பேர் மீது வழக்கு: போலீசார் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

இதனை எதிர்த்து ஜூன் 1ம் தேதியிலிருந்து டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதேபோல் திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய 490 பேர் மீது வழக்கு: போலீசார் அராஜகம்!

மன்னார்குடி, ஆலிவலம், கோட்டூர், திருகளார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேரை போலீசார் கைது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக ஜூன் 1 தேதி போராடிய 13 இடங்களில் போராட்டம் நடத்திய 450 விவசாயிகள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்பொழுதுவரை 495 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார். கடந்த ஒருவாரத்தில் 490 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவு படுத்த வேண்டும். எவ்வளவு அடக்குமுறை வந்தாலும் நிலத்திற்கான எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories