தமிழ்நாடு

அ.தி.மு.க - பா.ஜ.க.,வை தவிடுபொடியாக்கிய தமிழகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி ! - பாலகிருஷ்ணன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கத்த தமிழக வாக்காளர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க - பா.ஜ.க.,வை தவிடுபொடியாக்கிய தமிழகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி ! - பாலகிருஷ்ணன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை தவிடுபொடியாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற அபரிமிதமான வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வெற்றியை உறுதி செய்திட எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தல் களம் கண்ட தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க - பா.ஜ.க.,வை தவிடுபொடியாக்கிய தமிழகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி ! - பாலகிருஷ்ணன்

இத்தேர்தலில் மத்திய, மாநில ஆளும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் பண பலம், அதிகார பலம், தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பெரும்பகுதியான நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத் தேர்தல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்பட்டது தமிழகத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இத்தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் தேர்தல் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றி பெறும் வகையில் இந்திய நாட்டு மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

தமிழகத்தைப் போல் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர்தலை சந்தித்தது போல, இதர மாநிலங்களிலும் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளுக்கு இடையே பரஸ்பர போட்டியினை தவிர்த்து ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தால் தமிழகத்தைப் போலவே நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறும் நிலைமை உருவாகியிருக்கக் கூடும் என்பதை கவனப்படுத்த விரும்புகிறோம்.

இருப்பினும் மதவெறி சக்திகளை எதிர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளை பேணி காக்கவும், அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் இணைந்து பணியாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளர்.

banner

Related Stories

Related Stories