தமிழ்நாடு

சாதிய ஆணவப்படுகொலை மிரட்டல் : துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்கும் காதல் தம்பதி !

தங்களை சாதிய ஆணவப்படுகொலை செய்யப்படுவதாக அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனவே துப்பாக்கி உரிமம் கேட்டு காதல் தம்பதிகள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சாதிய ஆணவப்படுகொலை மிரட்டல் : துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்கும் காதல் தம்பதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். நாச்சியார்கோவிலை சேர்ந்த பிரவீன்குமார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் இருவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் 2 பெரும் மாற்று சாதியை சேர்த்தவர்கள் என்பதால் இவர்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சரண்யா நேற்று தனது கணவர் பிரவீன்குமாருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது; நானும், எனது கணவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளதால் என்னையும், எனது கணவரையும் ஆணவக்கொலை செய்ய உறவினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் என்மீது பலமுறை கொலை வெறி தாக்குதலை நடத்தி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் நான் அச்சத்தில் உள்ளேன்.

மேலும் எனது கணவரை பழிவாங்கும் நோக்கில் ரவுடிகள் பட்டியலில் நாச்சியார்கோவில் போலீசார் சேர்த்துள்ளனர். ஆனால் எனது கணவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. இதை எதிர்த்து எனது கணவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக போலீசாரும், சிலரும் சேர்ந்து எங்களை ஆணவ கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். நான் இது குறித்து 22 இடங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எனக்கு துப்பாக்கி உரிமம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சாதிய ஆணவப்படுகொலை மிரட்டல் : துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்கும் காதல் தம்பதி !

இதனையடுத்து பிரவீன்குமாரை ரவுடிகள் பட்டியலில் வைத்துள்ளதாகவும் அதனை நீக்க கோரி மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; நான் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஒருவர் என்னை ரவுடி பட்டியலில் சேர்த்து விட்டார். இதன் காரணமாக என் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டப்பட்டுள்ளேன். எனவே நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியும், எதிர்காலத்தில் என்மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடுத்து நிறுத்தியும், எங்களை வாழ வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்”என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories