விளையாட்டு

"ஹர்திக் மும்பையில் இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார்" - இந்திய முன்னாள் வீரர் கருத்து !

ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

"ஹர்திக் மும்பையில் இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார்" - இந்திய முன்னாள் வீரர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

"ஹர்திக் மும்பையில் இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார்" - இந்திய முன்னாள் வீரர் கருத்து !

இதனைத் தொடர்ந்து குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரோகித் சர்மா ரசிகராக யாருமே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவின் கேப்டன்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். மும்பை அணியின் கேப்டன் மற்றம் ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை.

இதற்கான எதிர்வினையைதான் ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டு வருகிறார். இதனால் ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார். ஆனாலும், ரசிகர்களின் செயலுக்கு எதிர்வினையும் காட்டாமல் ஹர்திக் அமைதியாக இருந்தார். அது ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கும் சிறந்த குணத்தை காட்டுகிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories