விளையாட்டு

"பெரிய தோல்வி வந்தாலும் இந்தியாவால் கம்பேக் கொடுக்க முடியும்" - இங்கி. முன்னாள் வீரருக்கு அஸ்வின் பதில்!

எவ்வளவு பெரிய தோல்விகளில் இருந்தும், இந்த இந்திய அணியால் கம்பேக் கொடுக்க முடியும் என இந்திய வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

"பெரிய தோல்வி வந்தாலும்  இந்தியாவால் கம்பேக் கொடுக்க முடியும்" - இங்கி. முன்னாள் வீரருக்கு அஸ்வின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பைத் தொடரின் தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

எனினும் மூன்றே நாளில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர். அப்போது பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், "சமீப காலங்களில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெறவில்லை. அணியில் அதீத திறமை இருக்கிறது, ஆனால், திறமைக்குக் குறைவாக ஆடும் அணியாக உள்ளனர்.

"பெரிய தோல்வி வந்தாலும்  இந்தியாவால் கம்பேக் கொடுக்க முடியும்" - இங்கி. முன்னாள் வீரருக்கு அஸ்வின் பதில்!

இந்திய அணியில் ஏராளமான திறமைகள், வள ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவர்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்" என்று கூறினார். இந்த நிலையில் அவரின் அந்த பேச்சுக்கு இந்திய வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அஸ்வின், "10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை நாம் வெல்லவில்லை. என்பது உண்மைதான். ஆனால் ஒரு டெஸ்ட் அணியாக இந்த இந்திய அணி வெளிநாடுகளில் மிகச்சிறந்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்தும், வென்றும் இருக்கிறோம்.

மைக்கில் வாகன் கருத்தை இந்தியாவிலும் சிலர் ஆமோதித்து பேசினார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பது சின்ன சின்ன தவறுகளால் மாற்றமடைந்துவிடும். எவ்வளவு பெரிய தோல்விகளில் இருந்தும், இந்த இந்திய அணியால் கம்பேக் கொடுக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. அதனை கேப் டவுன் டெஸ்ட் போட்டி உணர்த்தி விட்டது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories