விளையாட்டு

"தோல்வியுற்றால் உணர்ச்சியை கட்டுப்படுத்துவது கடினம்"- ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த தோனி!

உலகக்கோப்பை போட்டியின் போதே ஓய்வு பெற்றுவிட்டதாக தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

"தோல்வியுற்றால் உணர்ச்சியை கட்டுப்படுத்துவது கடினம்"- ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த தோனி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

"தோல்வியுற்றால் உணர்ச்சியை கட்டுப்படுத்துவது கடினம்"- ஓய்வு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த தோனி!

இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டியின் போதே ஓய்வு பெற்றுவிட்டதாக தோனி வெளிப்படையாக பேசியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட தோனி அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய தோனி, "மனதுக்கு நெருக்கமான ஆட்டத்தில் தோல்வியற்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்.

என்னைப் பொறுத்தவரை, 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியே நான் இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய கடைசி நாள். அந்த நாளுக்கு பின் ஒரு வருடம் கழித்து நான் ஓய்வு பெற்றாலும் அப்போதே நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது. நான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், ஓய்வுக்கு பின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கப்போவதில்லை. நான் ஓய்வுபெற முடிவெடுத்த தருணத்தில் இந்த விஷயங்கள் அனைத்தும் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories