விளையாட்டு

Asian Champions Trophy : பாகிஸ்தானை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா.. பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான் !

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

Asian Champions Trophy : பாகிஸ்தானை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா..  பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கிய முதல் நிமிடம் முதல் கடைசி நிமிடம் வரை களத்தில் அனல் பறந்தது. சற்றும் சளைக்காமல் ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் இந்தியாவுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்

Asian Champions Trophy : பாகிஸ்தானை நொறுக்கி அரையிறுதியில் இந்தியா..  பரிதாபமாக வெளியேறிய பாகிஸ்தான் !

முதல் பாதியில் 15மற்றும் 23வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அசத்தல் கோலாக மாற்றினார் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா முன்னிலை பெற்றது. 2வது பாதியில் 36வது நிமிடத்தில் இந்தியாவின் Jugraj Singh கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 56வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் கோல் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. முடிவில், 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த லீக் சுற்றில் இந்திய அணி 4 வெற்றி 1 டிராவுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. மலேசிய அணி 4 வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடமும், தென் கொரியா ஒரு வெற்றி , 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும், ஜப்பான் அணி ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியுடன் மூன்றாம் இடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

அதே நேரம் தென் கொரியா,ஜப்பான் அணிகளை போல ஒரு வெற்றி, 2 டிரா 2 தோல்வியை பெற்று இருந்தாலும் அதிக கோல்கள் வாங்கியதால் பாகிஸ்தான் அணி ஐந்தாம் இடம்பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. சீன அணி ஒரு டிரா, 4 தோல்வியுடன் கடைசி இடம் பிடித்தது.

banner

Related Stories

Related Stories