விளையாட்டு

" எப்பேர்ப்பட்ட அணி அது.. அந்த அணியின் இப்போதைய நிலை கவலையளிக்கிறது " -கபில்தேவ் வேதனை !

மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாத உலககோப்பையை கற்பனை செய்வது கடினம் என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

" எப்பேர்ப்பட்ட அணி அது.. அந்த அணியின் இப்போதைய நிலை கவலையளிக்கிறது " -கபில்தேவ் வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணி உலககோப்பைக்கு நேரிடையாக தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இதனால் அந்த அணி ஜிம்பாப்பேயில் நடைபெறற தகுதிச்சுற்றுப்போட்டியில் விளையாடியது. ஆனால், இந்தத் தொடரில் ஏ பிரிவில் இருந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எனினும் அந்த பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதால் போனஸ் புள்ளிகள் ஏதும் இல்லாமல் சூப்பர் 6 சுற்றுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறியது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்து அணியை சந்தித்தது.இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி, 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி உலககோப்பை தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

" எப்பேர்ப்பட்ட அணி அது.. அந்த அணியின் இப்போதைய நிலை கவலையளிக்கிறது " -கபில்தேவ் வேதனை !

1975,1979ம் ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக உலககோப்பைக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இல்லாத உலககோப்பையை கற்பனை செய்வது கடினம் என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் , ”உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடாதது வேதனை அளிக்கிறது. அந்த அணி இல்லாத ஒருநாள் போட்டியை கற்பனை செய்வது மிகவும் கடினமானது. ஒரு காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்கி வைத்திருக்கும் அணி அது. இப்போது அந்த அணி வீரர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அவர்கள் மீண்டு வருவார்கள்” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories